Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அடிப்படை சுகாதார பணிகள் கூட செய்யாத அரியமங்கலம் கோட்ட தலைவர்.புலம்பும் பொதுமக்கள்.

0

'- Advertisement -

திருச்சி மல்லிகைபுரம், இருதயபுரம், படையாட்சி தெரு, படையாட்சி தெருவில் அன்னை நகர், மரிய நகர்,எடத்தெரு மெயின் ரோடு உள்ளடக்கிய 32வது வார்டு மன்ற உறுப்பினரும் அரியமங்கலம் கோட்ட தலைவருமான ஜெயநிர்மலா.

இவரது கணவர் புஷ்பராஜ் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தில் இருக்கும் ஒரே காரணத்திற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தனது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் வளர்க்கும் நோக்கில் தலைமையகத்தில் வற்புறுத்தி கவுன்சிலர் சீட் பெற்று திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் இனிகோ இருதயராஜ் தயவால் அரியமங்கலம் கோட்ட தலைவராகவும் ஆனார் ஜெயநிர்மலா.

Suresh

ஆனால் கோட்ட தலைவராக இருந்தும் 32வது வார்டில் இதுவரை அடிப்படை பணிகள் ஏன் சுகாதாரப்பணிகள் கூட எதுவும் செய்யப்படவில்லை.
சாக்கடைகள் தூர்வாரப்பட்டு அந்த மண் காய்ந்து மீண்டும் தற்போது பெய்து வரும் மழையில் சாக்கடைக்குள் தான் செல்கிறது.

சாக்கடை மண்ணை அகற்ற கூட கவுன்சிலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏனென்றால் இவருக்கு அடிப்படை .மக்கள் பணி எதுவும் தெரியாது என்பதே உண்மை.

(இதற்கு அடுத்த வார்டு 33. இந்த வார்டின் கவுன்சிலர் தற்போதைய மாநகராட்சியின் துணை மேயர் ஆவார்.இந்த வார்டிலும் இதே நிலைமை தான். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என யாரையும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படி எந்த பணியும் செய்யாத, எதுவும் தெரியாத இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.