திருச்சி கருமண்டபத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி விழுந்த சாவு.
திருச்சி கருமண்டபம் ஆரோக்கியமாதா பள்ளி அருகாமையில் சுமார் 77 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று உள்ளார்.
பின்னர் அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செஷன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி பற்றி விசாரித்து வருகின்றனர்.