திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பழைய ஐ.எம்.சி.யு அருகில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் இருப்பதாக அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.