அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல் வயலூர் மணி முத்துச்செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள்
சங்கரதாஸ்
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்,
மகேந்திரன்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும்
முத்துவெங்கடேஸ்வரன்
புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு மு.பரஞ்ஜோதி விருப்ப மனு வழங்கினார்.
மேலும் மாவட்ட பொருளாளர் பதவிக்கு சேவியர்,பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு பிரியா சிவகுமார் உள்பட பலரும் விருப்ப மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி,
பரமேஸ்வரி ,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் திருவானைக்காவல் பகுதி செயலாளர் திருப்பதி
மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.