குடியிருப்பு நிறைந்த பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ராமலிங்கம், தமிழரசன், அ.தி.மு.க. பிரமுகர் கலீல் ரகுமான், அப்துல் ஹக்கீம், அபுதாஹீர், இளங்கோவன் உள்ளிட்ட பூக்கொல்லை தெரு,கீரைகடை தெரு வசந்த நகர், முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணாபுரம் சாலை குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும் .இந்த சாலையை அலங்க நாதபுரம் ,கீரைகடை தெரு, வசந்த நகர் ,கிழக்கு மற்றும் மேற்கு தாரநல்லூர், கிருஷ்ணாபுரம் ,முஸ்லிம் தெரு ,கிருஷ்ணாபுரம் நடுத்தெரு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த சாலை வழியாககல்விக் கூடங்களுக்கு சென்று வருகின்றனர் .
இந்த நிலையில் கிருஷ்ணாபுரம் ரோட்டில் மதுபானக்கடை பார் உடன் அமைக்கப்பட உள்ளது. இந்த கடை அமையவிருக்கும் வீடானது 120 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும். வீட்டின் மாடியில் மதுபான பார் அமைய இருப்பதால் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை குடிமகன்கள் வீடுகள் மீது வீசி எறியும் வாய்ப்பு உள்ளது .மேலும் குடிமகன்கள்பள்ளி சிறுவர்கள் பெண்கள் ஆகியோருக்கு இன்னல்கள் ஏற்படும். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சாலையாக இருக்கிறது. எனவே இந்த சாலையில் மதுபானக்கடை அமைந்தால் மேலும் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது .எனவே கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய மதுபான கடை திறக்கும் திட்டத்தை ரத்து செய்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.