பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் சிறப்பு கண் மருத்துவ மற்றும் இரத்ததான முகாம்கள் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் அவர்களின் ஆலோசனைப் படியும் பட்டுக்கோட்டை ஏனாதி கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் கண் மருத்துவ மற்றும் இரத்ததான முகாம்கள் நடைபெற்றது.
இந்த முகாம்களை ஏனாதி கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் திரு. கணேசன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், ஏனாதி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். விஜயலட்சுமி தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஏனாதி கலை அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். மாதவி மற்றும் ஏனாதி கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் ஏனாதி கலை அறிவியல் கல்லூரியின் 100 மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.

கண் மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

