Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தனியார் நிறுவன மேலாளர் மர்மசாவு. போலீசார் விசாரணை.

0

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு.திருச்சி தனியார் நிறுவன
மேலாளர் மர்ம சாவு. போலீசார் விசாரணை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனியார் நிறுவன மேலாளர் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தார் .

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன். (வயது 61).இவருக்கு ஒரு மகள் உள்ளார்.மகளுக்கு திருமணமாகி விட்டது.

பாண்டியன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பெயிண்டு நிறுவன குடோனில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சைக்கிளில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார் .வீடு திரும்பவில்லை. காணாமல் போன அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து அவரது மனைவி தாரா எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார் .இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விரைந்து சென்று ,தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிணத்துக்குள் கிடந்த பாண்டியனின் உடலில் செருப்பு காலில் இருந்தவாறு இருந்துள்ளது. சைக்கிளையும் காணவில்லை.

இதனால் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து இது கொலையா? அல்லது தற்கொலையா ?என்பது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.