Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுரை, திருநெல்வேலி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட பாரத முன்னேற்றக் கழக தலைவர் தலைவர் பாரதராஜா வேண்டுகோள்.

0

 

மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட முதலமைச்சருக்கு
பாரத முன்னேற்றக் கழகம் வேண்டுகோள்.

மதுரை- திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிகளில் யாதவர்களுக்கு பிரதிதித்துவம் வழங்க வேண்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பாரதராஜா வேண்டுகோள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகள் மட்டுமின்றி பெரும்பான்மை நகராட்சிகள்,
பேரூராட்சிகளை தங்கள் தலைமையிலான திராவிட. முன்னேற்றக் கழகம் கைப்பற்றிருப்பதற்கு முழு காரணம் தங்களின் திட்டமிட்ட முழு உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை.
இதற்காக தங்களுக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழகத்தில் தங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தகணமே அமைச்சரவையில் யாதவ சமுதாய சான்றோர்கள் இருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கியதற்கு இன்று வரை யாதவ சமுதாய மக்களில் 90 சதவீதம் பேர் வாக்குகளாக வழங்கி நன்றி கடனை அடைத்து வருகின்றனர்.

ஐயா.., அமைச்சரவையில் யாதவர்களுக்கு பிரநிதித்துவம் வழங்கியது போன்று திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற 21 மாநகராசிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிக்கான மேயர் பதவிகளையும்,சில நகராட்சி தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவிகளையும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்தவர்களுக்கு வழங்கிடுமாறு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் பணிவன்போடு வேண்டுகின்றோம்.

என பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பாரதராஜா யாதவ் ,மற்றும் பொது செயலாளர் ஆறுமுகசாமி யாதவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.