விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம் ரதி மீனா பார்சல் சர்வீஸ்.
திருச்சி டீ.வி.எஸ். டோல்கேடில் இருந்து ஜீ கார்னர் வரை செல்லும் சர்வீஸ் ரோடாக இல்லாமல் ஆபத்தான இருவழி பாதையாக இருந்து வரும் டீ.வி.எஸ்.டோல்கேட் ரோட்டில் தற்பொழுது சில மாதங்களாக ரதி மீனா பார்சல் சர்வீஸ் குடோன் இயங்கி வருகின்றது.
ஏற்கனவே இந்த ரோட்டில் பல விபத்துக்கள், உயிர் இழப்புகள் என இருக்கும் இந்த ரோட்டில்
தற்போழுது இயங்கி வரும் ரதி மீனா பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரிகள், வேன்கள் என எந்நேரமும் ஏற்றுவதும், இறக்குவதுமாக மெயின் ரோட்டை அடைத்து கொண்டு நிற்கின்றன.
இவை அந்த வழியே வரும் வாகன ஓட்டிகளிடையே பெரும் பதட்டத்தையும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
வேகமாக வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் பெரும் விபத்து நடக்கும் நிலையில் உள்ளது.
அந்த வழியே ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்நேரமும் பயத்தை ஏற்படுத்தி வரும் ரதி மீனா பார்சல் சர்வீஸ்சை பெரும் விபத்து நடக்கும் முன் வேறு இடத்திற்கு மாற்ற சம்மந்த பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.