Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 25ஆம் தேதி மின் வெட்டு..

0

 

திருச்சியில் வரும் 25 ஆம் தேதி மின் விநியோகம் ரத்து.

திருச்சியில் ஜனவரி 25 ஆம் தேதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மின்வாரிய திருச்சி நகரிய செயற் பொறியாளர் ச. பிரகாசம் தெரிவித்திருப்பது :

திருச்சி மாநகரில், மின்வாரியம் சார்பில் ஜனவரி 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, உயரழுத்த மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதனையடுத்து, திருச்சி மாநகரில் உறையூர் பிரிவுக்கு உட்பட்ட மங்கள்நகர், அகிலாண்டேஸ்வரி நகர், எஸ் பி ஐ காலனி, அரவானூர், மருதாண்டாக்குறிச்சி, சந்தோஷ்நகர், ஆளவந்தான் நகர், இராமநாதநல்லூர், சீராத்தோப்பு, சாத்தனூர், அமிர்தராஜநல்லூர்,

தென்னூர் பிரிவுக்கு உட்பட்ட தென்னூர் தென்னூர் ஹைரோடு, கே.எம்.சி மருத்துவமனை முதல் புத்தூர் நான்கு சாலை வரையில், காந்தி மார்க்கெட் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான காயிதே மில்லத் நகர் முதல், இந்து பத்திரிகை பதிப்பகம் வரை உள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.