மா.செ.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வடக்கு மாவட்ட அ.தி.மு.கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி கழக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவபதி, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,
செல்வராசு, இந்திராகாந்தி, பரமேஸ்வரி,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மருத்துவர் அணி டாக்டர் ராஜரத்தினம், கழக இளைஞரணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், சமயபுரம் சின்னையன், பொருளாளர் சேவியர், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ் மற்றும் பாசறை விவேக், பேரூர் கண்ணதாசன்,
ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன் ஜெய குமார் ,பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி ,
சுந்தர்ராஜ், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வருகிற 22 23 தேதிகளில் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும்,
முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.