திருச்சி, உறையூர் பகுதியில் மார்க்கெட் சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (வயது45). இவர், நேற்று இரவு உறையூர் சி.எஸ்.ஐ மருத்துமனை அருகேயுள்ள மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

வீட்டருகே வானத்தை நிறுத்தியபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள், அவரது கழுத்தில் கிடந்த 8 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.