Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு.

0

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் .

பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார் .

இந்நிகழ்ச்சிகளிகளில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் , நகரப் பொறியாளர் அமுதவல்லி , செயற்பொறியாளர்கள் சிவபாதம் , குமரேசன் உதவி ஆணையர் செல்வ பாலாஜி , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி , முன்னாள் துணை மேயர் அன்பழகன் , மாவட்டப் பிரமுகர் வைரமணி , அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்ட பல பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.