அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் . கோவணத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டம்.
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் . கோவணத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டம்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோவணதுடன் பிச்சை எடுக்கும் உண்ணாவிரதம் 3ம் நாள்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்,
மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில்
12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து
மூன்றாம் நாளான இன்று காலை 9 மணி முதல் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள்
கோவணத்துடன் அமர்ந்து மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.