திருச்சியில் மனைவியை சிலிண்டரால் தாக்கிய கணவன் கைது
திருச்சியில் மனைவியை சிலிண்டரால் தாக்கிய கணவன் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
மனைவியை சிலிண்டரால் தாக்கிய கணவன் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மனைவியை சிலிண்டரால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஜே.ஜே .நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 35 ) தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அனிதா ( வயது 33 ). இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரத்தில் மனைவியை சிலிண்டரால் கோபால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மனைவியை தாக்கிய கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

