நேரு யுவகேந்திரா,சிலம்பம் இளையோர் நல சங்கத்தின் சார்பில் சிலம்ப விழா, திருச்சி ஏ ஆர் மைதானத்தில் நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா,சிலம்பம் இளையோர் நல சங்கத்தின் சார்பில் சிலம்ப விழா, திருச்சி ஏ ஆர் மைதானத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா சிலம்பம் இளையோர் நல சங்கம் மற்றும் சிலம்பம் திருச்சிராப்பள்ளி மாவட்ட சங்கம் இணைந்து பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சி ஏ.ஆர். போலிஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி மன்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர்.ஆனந்த் அவர்கள் துவங்கி வைக்க,
திருச்சிராப்பள்ளி மன்டல ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா அதிகாரி எஸ்.சுருதி முன்னிலையில்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டு குறித்து விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு குறித்த விழிப்புணர்வுடன் பாரம்பரிய கலை விழா கடந்த 41 ஆண்டுகளாக எந்த கட்டணமும் பெறாமல் தன்னிடம் சிலம்பம் கற்க வரும் அனைவருக்கும் இலவசமாக சிலம்பம் கற்று தரும் கலைசுடர்மணி முனைவர் எம்.ஜெயக்குமார் பயிற்சியில் 100 க்கும் மேறபட்டோர் பங்கு பெற விழா நடைபெற்றது.
இந்த கலை விழாவில் மாணவர்கள் தாங்கள் கற்ற பல்வேறு தரப்பட்ட சிலம்ப விளையாட்டினை விளையாடி காண்பிது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
இந்த கலை விழாவில் ஏராளமான சிலம்ப மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசார் ஆகியோர் கலந்து கொண்டு சிலம்ப மாணவர்கள் அனைவரையும் பாராட்டினார்கள்.
விழாவில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் பாராட்டி சான்றிதழ்களை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள்.