Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 37 இலட்சம் மோசடி செய்த கணவன் மனைவி உள்ளிட்ட க்ரைம் செய்திகள்

0

'- Advertisement -

1.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே
லோடு வேனில் இருந்த பணம் திருட்டு .
2 பேர் கைது.

திருச்சி காட்டுப்புத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேல்இவர் சொந்தமாக லோடு வேன் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று வெல்லமண்டி சாலையில் தனது லோடு வேனை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டார் பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளிருந்த பணம் திருடு போயிருந்தது இது குறித்து தங்கவேல் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகமது முஸ்தபா மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suresh

2.
திருச்சி பாலக்கரையில்
இரும்பு கடை ஊழியர் திடீர் மாயம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர் ராமு .இவரது மகன் ஹரிஹரன் (வயது 26 )இவர் பாலக்கரை பகுதியில் உள்ள இரும்பு கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். குடும்பத் தகராறில் விரக்தியில் இருந்த இவர் திடீரென கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதுகுறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
திருச்சியில் ரூ 37 லட்சம் மோசடி புகார் ,
கணவன் கணவன் மனைவி மீது வழக்கு.

திருச்சி உய்யகொண்டான் திருமலை கீழத் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் ,விவசாயி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் இவர் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார் அந்த புகாரில் நாச்சிகுறிச்சி பகுதியில் ஒரு வீடு அளுந்தூரில் வீட்டுமனைகள் என பதிவு செய்த விவகாரத்தில் ரூ 37 லட்சம் மோசடி செய்ததாக திருச்சியைச் சேர்ந்த கணவன் மனைவி மீது புகார் கொடுத்தார் இந்த புகார் மீது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி விசாரணை நடத்தி கணவன் மனைவி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.