சரித்திரம் வாய்ந்த கடிகாரங்கள் ஒடவில்லை .
ஆங்கிலேயர்கள் ஆண்ட போது சரித்திரம் வாய்ந்த சில பொருள்கள் நம்மிடையே புழக்கத்தில் இருந்தது இப்போது அதை ஒவ்வொன்றாக அழிந்து வருகிறது அதில் குறிப்பாக திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள கடிகாரம் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே உள்ள கடிகாரம் புகழ் பெற்றவை.
கோர்ட் வளாகத்தில் உள்ள கடிகாரம் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது சென்ற ஆண்டு ரயில்வே தொழிலாளர்கள் ஒத்துழைப்பில் கடிகாரம் வேலை செய்தது . அதை சரியாக பராமரிக்காத காரணத்தால் இப்போது கடிகாரம் ஓடவில்லை.
அதேபோல பொன்மலை ரயில்வே பணிமனை கடிகாரம் ஆண்டுதோறும் மே மாதம் ஒருவாரமாக பராமரிக்காமல் கடிகாரம் தற்போது இரண்டு மாதங்களாக ஓடாமல் இருக்கிறது.
உடனடியாக கடிகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.


