Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:நேற்று ஒரே நாளில் 1600 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.ஐ.ஜி.(பொ) அருண் தெரிவித்தார்

0

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதுநாள் வரை 5,177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, இதுவரை விதிகளை மீறி சுற்றித்திரிந்த 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மட்டும் 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரத்தில் நேற்று வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று ஒரேநாளில் மட்டும், 1600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.(பொறுப்பு) அருண் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.