Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாலை விரிவாக்க பணிக்கு தீர்வு கோரி கோவிந்தராஜுலு தலைமையில் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

0

சாலை விரிவாக்க பிரச்சனைக்கு தீர்வு காண கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி வியாபாரிகள்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடித்து அகற்ற நடைபெற்றுவரும் முயற்சியை கண்டித்தும், அசூர்- ஜீயபுரம் அரைவட்ட சுற்று சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வலியுறுத்தியும் திருச்சி காட்டூர் எல்லைப்பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கிட சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய முதன்மை துணைத் தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது சாலை விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் அழிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ள வியாபாரிகள் மற்றும் குடும்பத்தார் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மத்திய மாநில அரசு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைத்திட வேண்டும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடும் யாராக இருந்தாலும் அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக 30,000 வாக்குகள் வியாபார குடும்பத்தினரிடமும் இவர்களின் மூலம் பொது மக்களை ஒன்று திரட்டி ஒரு லட்சம் வாக்குகள் உள்ளது.

தேர்தல் அறிக்கையின் போது இந்த சாலை விரிவாக்க பிரச்சினைக்கு எந்த ஒரு அரசியல் கட்சி தீர்வளிக்கிறதோ அந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை திட்டப் பணிகளுக்காக கடைகள் மார்க்கெட் என இடிக்கப்பட்டு வருகிறது, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த வியாபாரிகளின் குடும்பத்தினரின் வாக்குகள் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. அதன்மூலம் வெற்றியை தீர்மானிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை கொரோனா முழு ஊரடங்கு காலத்தில்கூட ஒரு சில கடைகள் மறைமுகமாக செயல்பட்டது.

ஆனால் இன்று வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததால் ஒரு கடை கூட திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.