அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்
வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் முன்னாள் தமிழக முதல்வர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் கழக
ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர், எதிர்கட்சி துணை
தலைவர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள், கழக இணை ஒருங்கிணைப்பாளர்,
முன்னாள் தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி
கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல பொறுப்பாளரும், கழக
துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம்,
அவர்களின் வழிகாட்டுதளின்படி இதய தெய்வம் பொன்மனச் செம்மல்
அ.இ.அ.தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவர் முன்னாள்
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105-வது பிறந்த நாளான 17.01.2022 திங்கள்
கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி கோர்ட் அருகிலுள்ள டாக்டர் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட
அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக
நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,
கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம். அம்மா
பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா
தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்
பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்
அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல்
தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.கோட்டத்
தலைவர்கள். Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள். கூட்டுறவு சங்க தலைவர்கள்,
இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள்,
செயல்வீரர்கள், வீராங்கனைகள்
அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்
என மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.