Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .ஒருவர் தப்பி ஓட்டம்.

0

'- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .

 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது இரண்டு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திர நகரை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 30) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் ஆல்பர்ட்டை கைது செய்து அவரிடமிருந்து

5, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.