Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .

0

'- Advertisement -

திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .

போலீசார் விசாரணை

 

திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 39) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இதனால் சங்கர் மன உளைச்சலில் இருந்தால் கடந்த 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

இதையடுத்து சங்கரை ஆபத்தான நிலையில் அவரது குடும்பத்தினர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார் .

 

இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.