Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

 

பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் கோரி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் திருச்சியில் நேற்று சனிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Suresh

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. சேதுராமன் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் சிறப்புப் பயிற்றுநா்களுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி பிடிக்க வேண்டும். மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீடு பிடித்தம் செய்ய வேண்டும். பணித் தளத்தில் ஏற்படும் விபத்து மரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களில் பணிபுரியும் இருபால் சிறப்புப் பயிற்றுநா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.