Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது . இன்ஸ்ட்டாவில் பழகியதால் வந்த வினை

0

'- Advertisement -

 

சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், வேலூா் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியாா் வங்கியில் வேலை பாா்த்தபோது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடலூா் மாவட்டம் கோட்டுமுல்லை காந்தி தெருவைச் சோ்ந்த மு. தினேஷ் (வயது 31) என்பவருடன் பழகியுள்ளாா்.

கடந்த பிப். 19 ஆம் தேதி அப்பெண்ணை, தினேஷ் காரில் வேலூரில் உள்ள தனியாா் உணவகத்துக்கு அழைத்துச் சென்று, குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, ஆபாசமாக படம் எடுத்துள்ளாா். இதையறிந்து அப்பெண் பேசியதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த தினேஷ், அந்தப் பெண் பேசவில்லையெனில் அவரது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, திருமணத்தை நிறுத்திவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நவ. 5-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா், 5 பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா். தினேஷ் வெளிநாடு சென்றதால், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரின் உத்தரவின் பேரில் தேடப்படும் குற்றவாளி (லுக் அவுட் நோட்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தினேஷ் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இறங்கிபோது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் தனிப்படையினா் அங்கு சென்று தினேஷை கைது செய்து, நேற்று வெள்ளிக்கிழமை திருச்சி அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.