திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்

சிகிச்சை பெற்ற இளம் பெண் மாயம் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் மதியழகன் அவரது மனைவி திவ்யா (வயது 27) சற்று மனநிலை சரியில்லாதவர். கர்ப்பிணியான இவர் திருச்சி மகாத்மா காந்தி மீது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்குஅடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கருவை கலைக்குமாறு மருத்துவர் அறிவுரை கூறிய உள்ளனர். இதையடுத்து திவ்யா கருக்கலைப்பு செய்து கொண்டார். பிறகு சிகிச்சை பெற்று வந்த திவ்யா மருத்துவமனை வார்ட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் மதியழகன் திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த
புகாரின் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திவ்யாவை தேடி வருகின்றனர்.

