திருச்சியில்

வாலிபரை கடத்தி சென்று 3 பவுன் நகை மற்றும் பணம் பறிப்பு.
மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் அல்லித்துரை,
வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டு இருந்து உள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் சந்தோஷ்யிடம் தகராறில் ஈடுபட்டு திட்டி பணம் கேட்டு உள்ளனர்.பணம் கொடுக்க சந்தோஷ் மறுத்தத்தை தொடர்ந்து அவரை மர்ம ஆசாமிகள் 3 பேரும் மிரட்டி அவருடைய இருசக்கர வாகனத்தில் கடத்தி கொண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள உப்பனூருக்கு
அழைத்துச் சென்று சந்தோஷை மிரட்டி அவருடைய ஜிபே மூலம் ரூ 35 ஆயிரம் பணத்தை மிரட்டி வாங்கிக்கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த
சந்தோஷ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் கோட்டை காவல் நிலைய போலீசார் இடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தாக்கி நகை பணத்தை கடத்தி சென்ற பறித்த மர்ம ஆசாமிகளை வலை விசி தேடி வருகின்றனர்.

