Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை ரூ. 44,25,820 பறிமுதல்

0

'- Advertisement -

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருடன் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு அனுமதியின்றிக் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்கின்றனா்.

 

அதன்படி நேற்று புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மாவட்டத்தில் திருச்சி கிழக்கில் ரூ. 1,42,500, லால்குடியில் ரூ. 1 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 55,600 என மொத்தம் ரூ. 2,98,100 பறிமுதல் செய்யப்பட்டது.

 

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று புதன்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 44,25,820 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 21,57,380 ஐ உரியவா்கள் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ. 22,68,440 கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.