Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதன்முறையாக 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை – தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

0

'- Advertisement -

திருச்சியில் முதன்முறையாக 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை – தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

மார்ச் மாதம் 2 வது வாரத்தில் உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் அர்ச்சன தெரேசா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குளுக்கோமா அதாவது கண் நீர் அழுத்த நோய் உலகளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும் பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது.

 

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்கல் கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும்.

திருச்சி தி ஐ பவுண்டேஷனின் சாதனைகளின் சிறப்பம்சங்களில் கண் அழுத்தத்தாலும், கண்புரையாலும் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதி சேர்ந்த ராஜு 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் தனது பார்வையை திரும்ப பெற்றவராக தனது தேவைகளைத் தாமாகவே கவனித்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.

106 வயதான முதியவருக்கு திருச்சியில் முதல் முறையாக குளுக்கோமா அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.