திருச்சி சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம்.
திருச்சி -தஞ்சை திருமண்டல பேராயர் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல் நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர் நிகழ்ச்சிக்கு சகரியா கிருபாகரன் தலைமை வகித்தார். குருத்துவ செயலாளர் ராஜா மான்சிங் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் இம்மானுவேல் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் ஏசுகுமார் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

