ஷபே பராக் நோன்பு
இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி.
இஸ்லாமிய மக்களின் சிறப்பான நாளான ஷபே பராக் நோன்பு நேற்று இரவு தொழுகை செய்து வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஹஜ்ரத் சான் மஸ்தான் தர்கா கபர்ஸ்தான் பள்ளிவாசல் அரங்காவலர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நோன்பு வைத்தவர்களுக்கு நோன்பு திறக்க பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி மஹல்லாவின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஹஜ்ரத் சான்மஸ்தான் முத்தவல்லி ஜமால் முகமது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நிர்வாகிகள் செயலாளர் மொய்னுதீன், பொருளாளர் ஷவகத் அலி,
உறுப்பினர் ஆசிப் உசேன், முகமது ஜமீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

