Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . 4 பேரின்உடல்களும் அழுகிய நிலையில் மீட்பு .

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை .

உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு .

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 4 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இன்று மீட்கப்பட்டது.ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் இன்று நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்

யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து வருகின்றனர்.

தற்போது வைகுண்ட ஏகாதசி விழா வருகிற

30-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த

சுவாமிநாதன் (வயது 67) இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 65). தனது திருமணம் ஆகி விவாகரத்தான மூத்த மகள் பவானி (வயது 42) கண்பார்வையற்ற மகள் ஜீவா (வயது 37) ஆகிய

இரண்டு மகள்களுடன் கடந்த 10 – ந் தேதி திருச்சி வந்தார் யாத்திரி நிவாஸில் 710 வது அறையை எடுத்து குடும்பத்துடன் தங்கினார். . கடந்த 4 நாட்களாக அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த யாத்திரிநிவாஸ் ஊழியர்கள் இன்று அங்கு சென்று பார்த்த போது அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.

உடனடியாக இது தொடர்பாக

ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

உடனடியாக உதவி போலீஸ் கமிஷனர் சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் உடல் அழகிய நிலையில் பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது.

 

. மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை.குடும்ப வறுமை ஒருபுறம் வாட்டி வதைத்தது.உறவினர்கள் யாரும் ஆதரவுக்கு என்று இல்லை.இதனால் வறுமை ஒரு புறமும்,மன உளைச்சல் ஒருபுறமும் இருந்த நிலையில் சீனிவாசன் ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கி உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாத்திரிநிவாஸ் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.