இங்கிலாந்து பக்தையின் விதி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முடிந்த பரிதாபம்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்
சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தனர். பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர் .
பின்னர் அண்ணன் தங்கை இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிப்பதற்காக ரங்கநாதர் கோவிலுக்கு வந்து உள்ளனர்.
ரங்கா ரங்கா ராஜகோபுரம் அருகே சென்றபோது நிஷா சாவ்லா திடீரென மயங்கி விழுந்தார். உடனே சகோதரர் அவரை மீட்டு ஶ்ரீங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு நிஷா சவுலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

