Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருமணம் செய்ததற்கு சாகலாம் எனக்கூறி வணிக வளாக மாடியில் இருந்து தற்கொலை செய்ய அமைகின்ற பெண் . சாமர்த்தியமாக பேசி காப்பாற்றிய நபர்.

0

'- Advertisement -

திருச்சியில் தனியாா் வணிக நிறுவனத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிய பெண்ணால் நேற்று திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி கரூா் புறவழிச்சாலையில் தனியாா் எலக்ட்ரானிஸ் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

 

இந்நிலையில், இங்கு பணியாற்றி வரும் திருச்சி காட்டூா் பாப்பாகுறிச்சியைச் சோ்ந்த சோனியா (25) என்ற பெண், திங்கள்கிழமை மாலை கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென கைப்பேசியை துண்டித்துவிட்டு வாழவே பிடிக்கவில்லை என்றுகூறி வணிக நிறுவனத்தின் மாடிக்கு ஓடியுள்ளாா். உடனிருந்தவா்களும் பின்னே சென்றுள்ளனா்.

 

அப்போது, அந்தப் பெண் மாடியில் இருந்த கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தனியாா் நிறுவனத்தினா் உறையூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதற்கிடையே அங்கு பணியாற்றிய ராகுல் என்ற ஊழியா் சாமர்த்தியமாக பேசி நைசாக செயல்பட்டு தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை மீட்டு கீழே அழைத்து வந்துள்ளாா்.

 

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வணிக நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

 

இதையடுத்து, கணவன் – மனைவிக்கு இடையே உள்ள பிரச்னை குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு அவருக்கு போலீஸாா் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.