திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி உறையூர் காசி செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 45) பெயிண்டர். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கடன் வாங்கி மது குடித்து வந்து உள்ளார்.இதனால் குடும்பத்தை சரிவர நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்
வேலைக்கு செல்லும் தனது மனைவி பிரியாவை நேற்று இருசக்கர வாகனத்தில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு
விஜயன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் ..பிறகு சிறிது நேரம் கழித்து பிரியா, தனது கணவன் விஜயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்று உள்ளார், ஆனால் விஜயன் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரியா பக்கத்து வீட்டில் உள்ள நபருக்கு போன் செய்து அவரை சென்று வீட்டில் பார்க்கச் சொல்லி உள்ளார்.அந்த நபர் வீட்டுக்கு சென்று பார்த்த போது விஜயன் அறையில் மனைவியின் சேலையில் தூக்குப் மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியா உடனடியாக வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

