ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில்
வாலிபர் தற்கொலை . செய்து கொண்ட பரிதாபத் சம்பவம் .
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை

திருவண்ணாமலை பரயம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22 ) இவர் மலேசியாவில் பணிபுரிந்து விட்டு தற்போது திருச்சிக்கு வந்து தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பழக்கடை அருகில் உள்ள மரத்தில் விக்னேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். .இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

