திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னார் புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் .அப்போது சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த.போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இது குறித்து அவரது மகன் திருக்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

