Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற 75 வயது மூதாட்டி கைது. மேலும் புகையிலை விற்ற 5 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற 75 வயது மூதாட்டி கைது

 

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எ.புதூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது இதையடுத்து உடனடியாக போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துளசி (வயது75) என்ற மூதாட்டியை கைது செய்து ஜாமினில் வெளியே விட்டனர். அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்

 

புகையிலை விற்ற 5 பேர் கைது.

 

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து

பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற காட்டூர், பாப்பாகுறிச்சி பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (வயது 42) என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கே. கே நகர் காஜாமலை அருகே புகையிலை விற்ற புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த முகமது ஹனிபா (வயது45) என்பவரை கேகே நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவரங்கம் அழகிரிபுறம் டாஸ்மாக் அருகே புகையிலை விற்ற திருவானைக்கோவில் அழகிரி புறத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 53 )என்பவரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 187 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை பகுதியில் கெம்ப்ஸ் டவுன் அருகே புகையிலை விற்ற மரக்கடை பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 43) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்கரை ஆலம் தெரு அருகே புகையிலை விற்ற பிரசாந்த் ராஜா (வயது 23) என்ற வாலிபரை பாலக்கரை போலீ சார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.