ஸ்ரீரங்கத்தில்
கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா ?
போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது 19 வயது மகள் ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
‘சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எங்கு தேடியும் எந்த தகவலும் இல்லை.
உடனே இது குறித்து மீனாட்சி திருவரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்கு பதிவு செய்து இவரை யாராவது கடத்தி சென்றாரா அல்லது மனம் விரும்பியுடன் சென்றாரா என்ற கோணத்தில்
விசாரணை மேற்கொண்டு வருகிறார்.