எடமலைப்பட்டி புதூரில் 17 வயது மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
எ. புதூர் போலீசார் விசாரணை .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 ) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தாயுடன் தனியாக வசித்து வந்த சரோன் ஜோசி மனமடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று விட்டில் இருந்த தாய் துர்கா வேலைக்கு சென்று விட்டார். இதன் பின்னர் விட்டில் தனியாக இருந்த சரோன் ஜோசி
அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.