திருச்சி பொன்னகரில் குடிபோதையில்
மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தற்கொலை.
உடலை கைப்பற்றி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50) கார் டிரைவர் .இவரது மனைவி நாராயணா சரோஜா (வயது 45 ) .இவர்களுக்கு ரம்யா, திவ்யா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரவிக்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் குடிபோதையில் வீட்டில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி நாராயணா சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.