கவின் ஆவண படுகொலை கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் .
நெல்லையில் நடந்த ஆவணக் கொலை , கவின் என்பவரை கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதியாமல் ,
பட்ட பகல் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் ஆவண கொலை செய்த கொடூர செயலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை திருச்சிராப்பள்ளி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் இந்த ஆவண கொலையை , சமூகத்திற்கு எதிராக செய்யும் அநீதிகளை எதிர்க்கும் போராட்டம் நடத்தினர்.
காக்கி உடையில் இருந்து கொண்டு அநீதிகளை செய்யும் சில கொடூரமான மிருகங்களுக்கு இதுவரை என்ன தண்டனை கிட்டியது என கோஷமிட்டனர் .