திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது .
திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை பார்க்க இருவரும் சென்று நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு மர்ம ஆசாமிகள் வழிமறித்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகக்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது முத்தரச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 28) ஆனந்த் பாபு (வயது 25) என்பது தெரிய வந்தது மேற்கண்ட இரண்டு பேர் சேர்ந்து பிரேம்குமார் மற்றும் அவரது நண்பரிடம் செல்போனை பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், ஆனந்த் பாபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.