Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ராம்ஜி நகரில் 14 கிலோ கஞ்சாவுடன் 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் அழகுராமு தலைமையிலான போலீசார் ராம்ஜி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

Suresh

அப்போது 11 இடங்களில் கஞ்சா விற்ற மலைப்பட்டி ஆர்.சுகுணா (வயது70), புது காட்டூர் கே.சுபாஷினி (வயது36), சி. பவித்ரன் (வயது28), கே.பாரதிராஜா (வயது46), மில் காலனி ம.சுந்தர்ராஜ் (வயது30), சரவணன் (வயது35), காந்தி நகர் குணா (வயது29), புதுக்காட்டூர் சசிதரன் (வயது47), தேவகி (வயது35), மணிகண்டன் (வயது46), கவிதா (வயது45), மலைப்பட்டி பிரசாத் (வயது32) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14,190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.