திருச்சி பாலக்கரையில் இளம் சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் சாவு .
போலீசார் விசாரணை .
திருச்சி முதலியார் சத்திரம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் அருள் தாஸ்.இவரது மகன் போஸ்கோ பெனடிக் (வயது29) இவருக்கு. திருமணம் ஆகி பிரிசிலா ( வயது 24) மனைவி உள்ளார்.
போஸ்கோ சென்னை பெருங்களத்தூர் பகுதியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அலுவலக விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். அப்பொழுது போஸ்கோ வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் அரக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி போஸ்கோ பெனடிக் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போஸ்கோ மனைவி பிரிசிலா பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.