Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடன் தொல்லையால் தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர். திருச்சியில் இன்று நடந்த பரிதாப சம்பவம்

0

'- Advertisement -

திருச்சியில் இன்று

2 குழந்தைகளைக் கொன்று ஜவுளிக்கடை அதிபர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.

 

 

பொன்மலை காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை.

 

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் தனது இரண்டு பெண் குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு;

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42) . மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

இவரது மனைவி விக்டோரியா (வயது 35) ரயில்வே ஊழியர் .

இந்த தம்பதியருக்கு ஆராதனா ( வயது 9) ஆலியா( வயது 3)

ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

கடன் தொல்லையால் விபரீத முடிவு

Suresh

அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான

அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன் காரர்கள் மனைவி குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார் அதன்படி நேற்று இரவு கணவன் மனைவி இரண்டு பேரும் ஆராதனா ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர்.

இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் குழந்தைகளின் அருகாமையில் அதே அறையில் அலெக்ஸ் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்கு போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

 

இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்த

பொன்மலை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடம் விரைந்து சென்றார் .

 

மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் .விசாரணை நடத்தினார்.

 

பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் இரண்டு குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்கொலை செய்து கொண்ட ஜவுளிக்கடை அதிபர் அலெக்ஸ் தனது கை பட எழுதி வைத்துள்ள டபரி சிக்கி உள்ளது அதில் அவர் நான் ஒரு வீடு கட்டினேன். அதற்கு கடன் பெற்றேன். என்னால் கடனை சரியாக திருப்பி செலுத்த இயலவில்லை. ஆகவே இந்த முடிவை எடுக்கிறோம் என எழுதி இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது .

 

மேலும் போலீஸ் விசாரணையில், தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு ஒரு அறையில் பேன் வக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் அவரது மனைவி மற்றொரு அறையில் தூக்கு மாட்டி. தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

கடன் தொல்லையால் கட்டிய வீட்டை விற்க அலெக்ஸ் முயன்றார். ஆனால் அவர் கட்டாயம் விற்க வேண்டிய வயிற்று வலி இருப்பதால் நியாயமான விலைக்கு யாரும் கேட்கவில்லை. உறவினர்களும் உதவ முன் வரவில்லை. இந்த விரக்தியில் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.