திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இறுதி ஊர்வலத்தில் வெடிவெடித்து
வியாபாரி காயம்

வெடி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை.
திருச்சி, வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 72). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று அப்பகுதி வழியாக இறுதி ஊர்வலம் வந்தது. அதில் 2 பேர் வேட்டு வெடி வைத்தனர். இதை சலீம் கண்டித்தார். இருந்தும் அவர்கள் வெடி வைத்தனர் இதில் எதிர்பாராத விதமாக வெடி முகமது சலீம் மீது வெடித்தது. இதில் காயமடைந்த முகமதுசலீம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.