திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து சாவு
போலீசார் விசாரணை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சென்னை பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அந்த முதியவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மயங்கி கிடந்த முதியவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோஅபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து மத்திய பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.