முதல்வர் வரும் நேரத்திலாவது நல்லதொரு விடிவு காலம் பிறக்குமா ? திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வலிமா மகாலில், அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது .
இச்சங்கத்தின் செயலாளர்
என். டி.கந்தன் வரவேற்புரை ஆற்றினார் .
அவைத் தலைவர் யு எஸ் .கருப்பையா,
ஒருங்கிணைப்பாளர்
வி.என் கண்ணதாசன்,
மற்றும் ஆலோசகர்கள்,
துணைத் தலைவர்கள்,
துணைச் செயலாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

1.பஞ்சப்பூரில் புதியதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 9.05.2025 அன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிகிறோம்.
2. கடந்த 29.6,2024- அன்று இதே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் புதிய மார்கெட் வடிவமைப்பு எந்த வகையிலும் சாத்தியமில்லாமலும், போதுமானதாகவும் இல்லை என்று வியாபாரிகள் நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். ஆட்சியர் எங்களை மீண்டும் அழைத்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு புதிய மார்க்கெட்டை ஒழுங்குப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்று வரை எங்களை அழைத்துப் பேசவில்லை.
இங்நிலையில், இன்று 02.5.2025 வெள்ளிக்கிழமை மாலை. 4.30 மணிக்கு எங்களை சந்திக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரம் ஒதுக்கி உள்ளார்.
இதன் அடிப்படையில் இன்று மாலை (2.5.2025) காந்தி மார்க்கெட்டின் 25 சங்கங்களின் நிர்வாகிகளும் கூட்டமைப்பின் தலைமையில் ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து எங்களின் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்.
இன்று மாலை பேச்சுவார்த்தையில் நல்லதொரு விரிவான தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தமிழக முதல்வர் திருச்சி வரும் நேரம் எங்களது காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிருேம்,
இதனை முன்வைத்தே அடுத்தடுத்து எங்களது செயல்பாடுகள் எவ்வாறு என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம் . ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் பொருளாளர்
ஜி. வெங்கடாசலம்
நன்றி கூறினார்.