திருச்சி ஸ்ரீரங்கம்
சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டயம் பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி, திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மணியரசன் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்த்து போலீசார் சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் அந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.
இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த வாலிபர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்னும் , அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.